கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க கிள்ளை பேரூராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட குடிநீர் வழங்கல் மேற்பார்வை பொறியாளர் சந்திரமோகன் கிள்ளை பேரூராட்சி பகுதியில் உள்ள நீரேற்று மின் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகை முத்துக்குமார், துணை தலைவர் கிள்ளைரவிந்திரன், கவுன்சிலர் பாண்டியன், செயல் அலுவலர் செல்வி, பேரூராட்சி எழுத்தர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.