தில்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் தின விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாலாஜி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வம், கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணை தலைவர் கிள்ளைரவிந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.