40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி

தமிழக மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, “கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

மு.க ஸ்டாலின் பிரதமர் ஆவாரா?.., செய்தியாளரின் கேள்விக்கு அவரே கூறும் பதில் இந்த வெற்றியை தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை தொடுத்தது பாஜக. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை அனைத்தையும் உடைத்தெறிந்து நாம் பெற்றுள்ள மகத்தான வெற்றி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “என் உயரம் எனக்கு தெரியும்” என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 1 =

Scroll to top
Social media & sharing icons powered by UltimatelySocial