தமிழ்நாடு துணை முதலமைச்சர் கடலூர் வருகை. வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வரவேற்பு.*
தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர், மாண்புமிகு *மு.க.ஸ்டாலின்* அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணை முதலமைச்சர், கழக இளைஞரணி மாநில செயலாளர் மாண்புமிகு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்கள் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வுகள் மற்றும் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார்.
அதனைத்தொடர்ந்து, கழக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர், பேரூர் கழக செயலாளர், *வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன்* அவர்கள் தலைமையில் துணை முதலமைச்சர் சின்னவர் அவர்களுக்கு பொன்னாடை வழங்கி பிரமாண்ட வரவேற்பு வழங்கினார். வேளாண்மை மேம்பாட்டுத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மற்றும் மாவட்ட கழக பொருளாளர் MRKP.கதிரவன் அவர்கள் பங்கேற்றார். இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டில் “கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்” வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வழங்கி சிறப்பித்தார். பின்பு தனது எழுச்சிமிகு உரையாடலால் கழக நிர்வாகிகளையும், லட்சக்கணக்கான தொண்டர்களையும் திணரச் செய்தார்.