சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 86-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் பங்கேற்றார்.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் அவர்களின் சிலைக்கு அமைச்சர் கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் அவர்கள் பங்கேற்று வீரவணக்கம் முழக்கம் எழுப்பினார்.
சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் கோவி.செழியன் மாலை அணிவித்து மரியாதை.